ரஷியாவுடன் நல்லுறவு கொண்டிருந்தால் பாகிஸ்தான் மலிவான விலையில் எரிவாயுவை பெற்றிருக்க முடியும்: இம்ரான் கான்


Image Source: Twitter
x
Image Source: Twitter
தினத்தந்தி 8 May 2022 4:21 AM GMT (Updated: 8 May 2022 4:21 AM GMT)

பாகிஸ்தான் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷியாவிடம் இருந்து உறுதி செய்திருக்க முடியும் என்றார்.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களுடன் காணொலி அமர்வில் உரையாற்றினார்.அப்போது ரஷ்யாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை வைத்திருந்தால், நம் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடம் இருந்து உறுதி செய்திருக்க முடியும் என்றார். 

வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுடன் காணொலி அமர்வில் உரையாற்றும் போது, இம்ரான் கான் கூறியதாவது:-

பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அதன் சொந்த நலன்களுக்காக வடிவமைக்கப்பட வேண்டும். பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையை மட்டுமே நான் விரும்பினேன். வேறு எந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்காகவும் நம் நாட்டைப் பலியிடக் கூடாது.

நாங்கள் ரஷ்யாவிலிருந்து மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை விரும்பினோம்.மாஸ்கோ எரிவாயு மற்றும் கோதுமையை 30 சதவீதம் குறைந்த விலையில் வழங்க ஒப்புக்கொண்டது. ரஷ்யாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை வைத்திருந்தால், நம் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடம் இருந்து உறுதி செய்திருக்க முடியும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் எனக்கு நல்ல உறவு இருந்தது, ஆனால்  மற்றவர்களை தங்கள் கட்டளைகளைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்த அமெரிக்கர்கள் விரும்பினர். 

நமது ஆட்சியாளர்களில் ஒருவரான பர்வேஸ் முஷாரப்புக்கு விடுக்கப்பட்ட ஒரு மிரட்டல் அழைப்பிற்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்தார். பயங்கரவாதம் மீதான போருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அமெரிக்காவிற்கு இராணுவ தளங்களை வழங்க நான் நிராகரித்த பின்னரே அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பிக்கப்பட்டன. பாகிஸ்தானின் மிர் ஜாபர் மற்றும் மிர் சாதிக் ஆகியோர் நமது அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்காவிற்கு உதவினார்கள்.

எனது தலைமையிலான பிடிஐ அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலை இப்போது புதிய சாதனை அளவைத் தொட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கடிதம் எழுத வேண்டும், சமூக ஊடக பிரச்சாரங்களை நடத்த வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெளிநாட்டு சதிக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்கு இம்ரான் கான் பாராட்டும் தெரிவித்தார்.

Next Story