சீனாவில் புதிதாக 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


சீனாவில் புதிதாக 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 May 2022 10:57 PM GMT (Updated: 12 May 2022 10:57 PM GMT)

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் மட்டும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பெய்ஜிங்,

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. 

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 222 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஷாங்காய் நகரத்தில் மட்டும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 1,630 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் 571 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். சீனாவில் தற்போது 7,229 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story