வங்காளதேசம்: சேமிப்புக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு..!


வங்காளதேசம்: சேமிப்புக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு..!
x

image credit: ani twitter

இரசாயன எதிர்வினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் முக்கிய கடல் துறைமுகமான சிட்டகாங் பகுதி வெளியே 40 கி.மீ தொலைவில் சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 450 பேர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரசாயன எதிர்வினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தொடர்விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story