துருக்கியில் மினிபஸ் மீது டிரக் மோதி விபத்து - 8 பேர் பலி, 10 பேர் காயம்


துருக்கியில் மினிபஸ் மீது டிரக் மோதி விபத்து - 8 பேர் பலி, 10 பேர் காயம்
x

துருக்கியில் நேற்று மினிபஸ் மீது டிரக் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இஸ்தான்புல்,

துருக்கியின் வடமேற்கு மாகாணமான பலிகேசிரில் நேற்று மினிபஸ் மீது டிரக் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். துர்சன்பே மாவட்டத்தில் இருந்து திருமண நிகழ்வுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ், புறப்பட்ட சிறிது நேரத்தில் சிட்டி சென்டரில் பால் ஏற்றி வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன. விபத்து நடந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கனமழை மற்றும் முறையற்ற பாதை மாற்றத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறிய பலிகேசிர் கவர்னர் ஹசன் சில்டாக், விபத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து சட்ட அமலாக்கம் விசாரித்து வருகிறது என்று தெரிவித்தார்.


Next Story