ஜப்பான்: ஷிசுவோகா மாகாணத்தை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் - 2 பேர் பலி


ஜப்பான்: ஷிசுவோகா மாகாணத்தை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் - 2 பேர் பலி
x

ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தை தலாஸ் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இதில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

டோக்கியோ,

ஜப்பானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷிசுவோகா மாகாணத்தை தலாஸ் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. புயலை தொடர்ந்து அங்கு கொட்டித்தீர்த்த கனமழையால் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர். பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

முன்னதாக ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நான்மடோல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.

சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது. கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. புயலால் பல்வேறு சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. புயல், மழையைத் தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.


Next Story