வடகொரியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக தகவல்


வடகொரியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக தகவல்
x

வடகொரியா தற்போது தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சியோல்,

வடகொரியாவில் கொரோனா தொற்று நுழைந்திருப்பதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த 12-ந்தேதி உறுதிப்படுத்தினார். அதே கையோடு ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அறிவித்தார். தடுப்பூசி நுழைந்திராத அந்த நாட்டுக்கு, தொற்றை கட்டுப்படுத்த உதவ தயார் என அமெரிக்காவும், தென்கொரியாவும் முன் வந்தன.

ஆனால் இதுபற்றி வெளிப்படையாக கருத்து கூறாத வடகொரியா, தற்போது தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசியின் செயல்திறன் பற்றி கேள்வி எழுப்பி உள்ளது.

இதுபற்றி வடகொரிய மந்திரிசபை நடத்துகிற பத்திரிகையில், "கொரோனாவுக்கு எதிராக மருந்து கம்பெனிகள் தடுப்பூசிகளை உருவாக்குகின்றன. சிகிச்சைகளை உருவாக்கி உள்ளன. ஆனால் அவற்றின் உலகளாவிய பயன்பாடு கேள்விகளை எழுப்புகிறது" என கூறப்பட்டுள்ளது.

தினந்தோறும் கொரோனா அறிகுறி 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று 1.34 லட்சம் பேருக்கு மட்டுமே அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story