வங்காளதேசம்: சேமிப்புக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு


வங்காளதேசம்: சேமிப்புக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு
x

தீ விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தின் சிட்டகாங் நகருக்கு வெளியே 40 கி.மீ. தொலைவில் கதம்ரசூல் பகுதியில் தனியார் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 450 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தீ விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது . இந்தஎண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது .

ரசாயன எதிர்வினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் படுகாயமடைந்தவர்களை, மீட்டு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார் .


Next Story