பாகிஸ்தான்:முன்கூட்டியே தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் - இம்ரான் கான்


பாகிஸ்தான்:முன்கூட்டியே தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் - இம்ரான் கான்
x

பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் என முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தொிவித்து உள்ளாா்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அதிக அளவு பணவீக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் நிலவி வரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில்,அவா்களோடு காணொளி மூலம் உரையாடினாா்.

அதில் பேசிய அவா், நான் உங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படாவிட்டால், மேலும் குழப்பம் பரவும். முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலும் மோசம் அடையும் என்றாா்.

மேலும், பெட்ரோல் விலையை அதிகரிப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு எதிராக தனது அரசாங்கம் பெட்ரோல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோலுக்கான மானியத்தை திரும்ப பெற்றதற்காக அரசாங்கத்தை அவா் கடுமையாக சாடினாா்.

தற்போது உள்ள அரசானது பொருளாதாரத்தை கையாளும் திறனற்றது என அவா் குற்றம் சுமத்தினாா். மேலும், வரும் நாட்களில் விலைகள் அதிகமாக உயரும் என எச்சாித்தாா்.

முன்னதாக, அங்கு புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. இதனை எதிா்த்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தாா்.


Next Story