பிரமாண்ட திருவுருவங்கள்
கருடாழ்வார் சுமார் 30 அடி உயரத்திலும், அனுமன் சுமார் 25 அடி உயரத்திலும் பிரமாண்டமாக காட்சிதருகின்றனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் பொன்னூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு பெருமாள் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்தில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வாரும், சிறிய திருவடி என்று அழைக்கப்படும் அனுமனும் பெரிய உருவங்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். கருடாழ்வார் சுமார் 30 அடி உயரத்திலும், அனுமன் சுமார் 25 அடி உயரத்திலும் பிரமாண்டமாக காட்சிதருகின்றனர். இவர்களுக்கு ஏணி மேல் ஏறி நின்றுதான் அர்ச்சகர்கள் அபிஷேகம், அர்ச்சனை போன்றவற்றைச் செய்கிறார்கள்.
Next Story