தந்தையும்.. தனயனும்..


தந்தையும்..  தனயனும்..
x
தினத்தந்தி 2 Feb 2018 1:00 AM GMT (Updated: 1 Feb 2018 8:58 AM GMT)

‘தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்று ஒரு பழமொழி வழக்கில் உண்டு. ஆனால் தந்தையான சிவபெருமானைப் போலவே, தோற்றங் களில் சிலவும், குணங்களில் சிலவும் தனயனான விநாயகப் பெருமானிடம் உண்டு. அதைப் பற்றிப் பார்க்கலாம்.

*    ஈசனைப் போலவே, விநாயகரும் சிவந்த மேனியைக் கொண்டனர்.

*    பார்வதி தேவி, சிவபெருமானின் இடப் பாகத்தில் இருப்பது போல, வல்லபை விநாயகரின் இடப்பாகத்திலும் பார்வதி தேவி இருப்பார்.

*    சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் உண்டு. அதேபோல், ஹேரம்ப கணபதிக்கும் 5 தலைகள் உண்டு.

*    தந்தையான ஈசனுக்கும், தனயனான விக்னேஸ்வரருக்கும் மூன்று கண்கள் உண்டு.

*    இருவருமே பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பார்கள்.

*    ஈசன் நடனக் கோலத்தில் இருப்பதை நடராஜர் என்கிறோம். அதே போல் விநாயகர் நடனக் கோலத்தில் இருப்பதை நர்த்தன கணபதி என்கிறோம்.

*    இருவரும் தலையில் மூன்றாம் பிறையை அணிந்திருப்பார்கள்.

Next Story