நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்


நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்
x
தினத்தந்தி 17 April 2018 7:54 AM GMT (Updated: 17 April 2018 7:54 AM GMT)

தெய்வத்திற்கு நிகரானது எதுவுமில்லை. எத்தனை சோதனைகள் வந்தாலும் அவை நம்மை விட்டு விலகிச் செல்வதற்கு, இறைவனை வணங்குவதே ஒரே வழி.

சனை வணங்கினால் எந்தத் துன்பமும் நேராது. பஞ்சாட்சரம் எனப்படும் ‘நமசிவய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தையும், ‘சிவசிவ’ என்ற சிவ நாமத்தையும் உச்சரித்தாலே நமக்கு சிவசிந்தனை மேலோங்கும்.

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கற்கள், அதிர்ஷ்ட தெய்வங்கள் இருக்கும். அது போலவே நட்சத்திரத்திற்கும் அதிர்ஷ்ட தெய்வங்கள், கற்கள், கோவில்கள் என அனைத்தும் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் வழிபடுவதற்கு சிவபெருமானின் ரூபங்கள் உள்ளன. எந்த நட்சத்திரக்காரர்கள், எந்த ரூபத்தில் உள்ள ஈசனை வழிபட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

1. அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்

2. பரணி - சக்தியுடன் கூடிய சிவன்

3. கிருத்திகை - தனியாக இருக்கும் சிவன்

4. ரோகிணி - பிறை சூடியப் பெருமான்

5. மிருகசீரிடம் - முருகனுடன் கூடிய சிவன்

6. திருவாதிரை - நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

7. புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

8. பூசம் - நஞ்சுண்ணும் ஈசன்

9. ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்

10. மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்

11. பூரம் - அர்த்தநாரீஸ்வரர்

12. உத்திரம் - தில்லை நடராஜ பெருமான்

13. அஸ்தம் - தியான கோல சிவன்

14. சித்திரை - நந்தி தரிசித்தபடி இருக்கும் பார்வதியுடன் கூடிய சிவன்

15. சுவாதி - சகஸ்ரலிங்கம்

16. விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்

17. அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்

18. கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்

19. மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

20. பூராடம் - சிவ சக்தி கணபதி

21. உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை காணும் சிவன்

22. திருவோணம் - சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசீர்வதிக்கும் சிவன்

23. அவிட்டம் - மணக்கோலத்துடன் உள்ள சிவன்

24. சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன் உள்ள சிவன்

25. பூரட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும், சக்தியை அருகிலும் இணைத்து காட்சி தரும் சிவன்

26. உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

27. ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள சிவரூபங்களை வழிபட்டு வந்தால் துன்பங்கள் விலகி ஓடும். 

Next Story