மார்கழி மாதச் சிறப்பு


மார்கழி மாதச் சிறப்பு
x
தினத்தந்தி 10 Dec 2019 1:18 PM GMT (Updated: 10 Dec 2019 1:18 PM GMT)

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என கிருஷ்ணர், மார்கழி மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார். இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறை வழிபாடு செய்வது வழக்கம்.

தேவர்களுக்கான பொழுதில், அதிகாலை நேரமாக இந்த மார்கழி மாதம் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் ‘தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

மார்கழியில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி, மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.


Next Story