மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே...


மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே...
x
தினத்தந்தி 13 Jan 2021 10:00 PM GMT (Updated: 13 Jan 2021 7:22 PM GMT)

ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன.

விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தும் விதமாகத்தான், நாம் கதிரவனுக்கு மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். முன்பெல்லாம் மக்கள் மண்பானையில் தான் பொங்கல் வைப்பார்கள். ஆனால் தற்காலத்தில் ‘உருளி’ எனப்படும் செம்பில் பொங்கல் வைக்கிறார்கள். உடல்நலம் சீராக இருப்பதற்கு மண்பானை சமையல் ஏற்றது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

காலத்தின் சூழ்நிலையால் நாம் அதைத் தினமும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற இயற்கையைக் கொண்டாடி வழிபட்டால் இனிய வாழ்வு அமையும் என்பதே இதன் தத்துவம்.

Next Story