ராமன் வழிபட்ட ஈசன்
சீதையைத் தேடி வனம் முழுவதும் அலைந்து கொண்டிருந்த ராமபிரான் சிவபெருமானை, குருவாக நினைத்து வழிபாடு செய்தார்.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் உள்ளது போரூர். இங்கு ராமநாதீஸ்வர் திருக்கோவில் இருக்கிறது. மிகவும் பழமையான இந்தக் கோவில், ராமாயணத்தோடு தொடர்புடையது என்கிறார்கள். இலங்கைக்கு ராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடி வனம் முழுவதும் அலைந்து கொண்டிருந்தார், ராமபிரான்.
அப்போது அவர், இந்தத் திருத்தலத்திற்கு வந்து 48 நாட்கள் தங்கியிருந்து விரதம் கடைப்பிடித்து பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றதாக தல வரலாறு சொல்கிறது. சிவபெருமானை, குருவாக நினைத்து ராமபிரான் வழிபாடு செய்த காரணத்தால், இந்த ஆலயம் குரு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
Related Tags :
Next Story