பிரதோஷ பலன்


பிரதோஷ பலன்
x
தினத்தந்தி 16 March 2021 11:35 AM GMT (Updated: 16 March 2021 11:35 AM GMT)

சென்னை கோயம்பேட்டில் உள்ள குசலவபுரீஸ்வரர் ஆலயத்தில் ஒரு பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால், ஆயிரம் பிரதோஷம் பார்த்த பலன் கிடைக்குமாம்.

சென்னை கோயம்பேட்டில் குசலவபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இது ராமாயணத்தோடு தொடர்புடைய ஆலயம். ராமபிரானின் மகன்களான லவன் மற்றும் குசன் இருவரும், யார் என்று தெரியாத காரணத்தால், ராமரோடும், அவரது சேனைகளோடும் போரிட்டனர். அந்த தோஷம் நீங்குவதற்காக, வால்மீகி முனிவரின் உத்தரவுப்படி 12 ஆண்டு காலம், இத்தலத்தில் தங்கியிருந்து பிரதோஷ பூஜை செய்து வந்தனர். 

அப்போது வால்மீகி முனிவருடன் சேர்ந்து லவனும், குசனும் ஆதரவற்ற பசுக்களை பாதுகாத்து வந்தனர். இதன் காரணமாகவே இத்தல இறைவன் ‘குசலவபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் ஒரு பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால், ஆயிரம் பிரதோஷம் பார்த்த பலன் கிடைக்குமாம்.

Next Story