சிறப்பான வாழ்வருளும் ஆடி செவ்வாய்


சிறப்பான வாழ்வருளும் ஆடி செவ்வாய்
x
தினத்தந்தி 20 July 2021 1:35 PM GMT (Updated: 20 July 2021 1:35 PM GMT)

அம்பாளை வழிபாடு செய்வதில், ஆடி மாதம் முக்கியமானதாக இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறை வேறும். ஆடி வெள்ளி வழிபாடு போலவே, ஆடி செவ்வாய்க்கிழமையும் சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில், அம்பாளை வழிபட்டு ‘மங்கல கவுரி விரதம்’ கடைப்பிடித்து வந்தால், நற்பலன் களைப் பெறலாம். ஆடி செவ்வாய் அன்று அன்னதானம் செய்வது, மற்ற தினங்களில் அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களைப் பெற்றுத் தரும்.

பெண்கள் அனைவரும் ஆடி செவ்வாய்க்கிழமைகளில், எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி நீராடி விரதம் மேற்கொண்டு அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் கூடும். ராகுவின் அதிதேவதையாக காளிதேவி இருக்கிறாள். எனவே செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்றவற்றால் திருமணத் தடை ஏற்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், செவ்வாய்க்கிழமையில் வரும் ராகு கால பூஜையில் கலந்துகொள்ளலாம்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனை மட்டுமின்றி, முருகப்பெரு மானையும் வழிபடுவதற்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருந்து தீபம் ஏற்றி, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

ஆடி மாத செவ்வாய் அன்று அவ்வையார் விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்வையாரை நினைத்து விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். பச்சரிசி மாவில், வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரித்து, அதை அவ்வையாருக்கு நைவேத்தியமாக படைப்பார்கள். இரவு நேரத்தில்தான் அவ்வையார் விரதம் இருப்பார்கள். இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருக்கும் போது, நைவேத்தியமாக படைக்கப்பட்ட கொழுக்கட்டையை உண்பார்கள். இந்த விரதத்தை மூத்த சுமங்கலி பெண்களின் வழிகாட்டுதல்படி, இளம் பெண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். இதில் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை. ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் அவ்வை யாருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.

Next Story