வியப்பூட்டும் திருவோடு


வியப்பூட்டும் திருவோடு
x
தினத்தந்தி 2 Aug 2021 7:13 PM GMT (Updated: 2 Aug 2021 7:13 PM GMT)

சைவத்தைப் பின்பற்றும், சிவனடியார்களின் கையில் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள், ‘திருவோடு.

’ சிவபெருமான் ‘பிட்சாடனர்’ வடிவத்தில் கையில் ஏந்தியிருந்த இந்தத் திருவோடு, சிவனடியார்களின் புனிதப் பொருளாக விளங்குகிறது.

திருவோடு, குறிப்பிட்ட ஒரு மரத்தின் விதையில் இருந்து மட்டுமே செய்யப்படுகிறது. அந்த மரம் ‘மெக்ஸிகன் காலேபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த மரத்தின் பூர்வீகம், தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கில் உள்ள கோஸ்டா ரிக்கா வரையான பகுதிகள். திருவோடு மரத்தில் சில வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மரத்திற்கு மரம் இலைகளும், காய்களின் வடிவமைப்புகளும் கூட மாறுபடுகின்றன.

இதனை ‘கடல் தேங்காய்’ என்றும், ‘கோக்கோ டி மெர்’ என்றும் அழைக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய விதை, இந்த திருவோடு காய்தான்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள சீசெல் என்னும் தீவுகளில் காணப்படும் இந்த மரத்தின் விதைதான், திருவோடு செய்வதற்கான காய் ஆகும்.

திருவோடு மரத்தில் ஆண், பெண் பிரிவு உண்டு. பூ மலர்ந்து காயாக 10 வருடங்கள் பிடிக்கும் என்கிறார்கள். பூக்கள் நறுமணம் கொண்டது. இதனைத் தேடி வவ்வால்கள் படையெடுக்கும். இவைதான் மரகந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.

விதை ஒன்றின் எடை 7 கிலோ வரை இருக்குமாம். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை என்கிறார்கள்.

காய், பெரிய தேங்காய் போல இருக்கும். ஓடு மிகவும் கடினமானது. ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி பனை நுங்கு போல் இருக்கும். முற்றியதும் தேங்காய் போல சுவை இருக்கும். முற்றிய காய் உதிர்ந்து விழுந்துவிடும். மாலத்தீவுகளில் இந்த காய்கள் நிறைய கரை ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.

திருவோடு, பிச்சைப் பாத்திரம் மட்டுமல்ல. அது சிறந்த மூலிகை விருட்சத்தில் இருந்து கிடைக்கும் ஒப்பற்ற அட்சயமாகவும் உள்ளது. இதில் முப்பத்திரண்டு வகையான தான, தர்ம தேவதைகள் வாசம் செய்கிறார்களாம்.

Next Story