பூஜைக்கேற்ற பூவிது...
மலர்களால் மனக்கவலை தீரும் என்றால், ஆச்சரியமாகத்தான் இருக்கும். மலர்களிலும் பல மகத்துவங்கள் உள்ளன. தெய்வ வழிபாட்டிற்கென எண்ணற்ற மலர்கள் இருந்தாலும், அவைகளில் நம் எண்ணங்களை நிறைவேற்றும் மலர்களைத் தோ்ந்தெடுத்து பூஜை செய்தால் தெய்வத்தின் அருள் எளிதில் கிடைக்கும்.
* மனோரஞ்சித மலரை வழிபாட்டிற்கு பயன்படுத்தினால், தம்பதியர்களுக்குள் ஒற்றுமை பலப்படும்.
* மனக்கவலை தீரவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் வெண்தாமரை மலரை இறைவழிபாட்டில் சேர்க்கலாம்.
* நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.
* பாரிஜாத மலரை வழிபாட்டில் வைத்தால், ஆயுள் விருத்தி அதிகரிக்கும்.
* வில்வம், துளசி போன்ற இலைகளை, இறைவனுக்கு சாத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும்.
* மரிக்கொழுந்தை பூஜைக்கு பயன்படுத்தினால் புகழ் பெருகும்.
Related Tags :
Next Story