உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றம்
உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றம் நடந்தது.
கன்னியாகுமரி
மேலகிருஷ்ணன்புதூர்,
உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றம் நடந்தது.
கொடியேற்றம்
நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா நேற்று தொடங்கியது.
இதனையொட்டி நேற்று காலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர் எம்.தங்க கிருஷ்ணன் தலைமையில், ஊர் நிர்வாகிகள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பா.ஜ.க. மாவட்ட பொருளாளரும், நாகர்கோவில் மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story