புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சபரிமலைக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான அன்னதான பொருட்கள் அனுப்பி வைப்பு


புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சபரிமலைக்கு  ரூ.15 லட்சம் மதிப்பிலான அன்னதான பொருட்கள் அனுப்பி வைப்பு
x

புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சபரிமலைக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான அன்னதான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பந்தளராஜா யாத்திரைக்குழு அய்யப்ப பக்தர்கள் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு ஆண்டு தோறும் காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 9-வது ஆண்டாக அன்னதானத்துக்கு தேவையான 50 மூட்டை அரிசி, 1000 கிலோ ரவை, 500 கிலோ கொண்டை கடலை, 600 கிலோ துவரம்பருப்பு, 350 கிலோ பனங்கருப்பட்டி, உளுந்தம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள், தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பூசணி உள்ளிட்ட காய்கறிகள் என மொத்தம் ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் 6 லாரிகளில் ஏற்றப்பட்டு சபரிமலை சன்னிதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், நிலக்கல் தேவசம் போர்டு, மணிகண்ட சேவா சமிதி ஆகிய இடங்களுக்கும் கூடுதலாக காய்கறிகள், மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

1 More update

Next Story