சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


சவேரியார் பேராலய திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர் பவனி வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர் பவனி வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.

கொடியேற்றம்

நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த தூய சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட் கொடி புனித அர்ச்சிப்பு செய்யப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு ஆலயக்கொடி மரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தொடர்ந்து முன்னாள் பிஷப் ஜூடுபால்ராஜ் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றி நற்செய்தி வழங்கினார்.

திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, மறையுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சப்பர பவனி

விழாவின் முக்கிய நிகழ்வான புனிதரின் திருஉருவ தேர் பவனி வரும் 2-ந்தேதியும், திருவிழா திருப்பலி, புதுநன்மைத் திருவிழா 3-ந்தேதியும் நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story