சிவன் கோவில் கும்பாபிஷேகம்


சிவன் கோவில் கும்பாபிஷேகம்
x

நஞ்சேகவுண்டன்புதூரில் சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவை அடுத்த நஞ்சேகவுண்டன்புதூரில் பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி மங்கல இசை, முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது.

108 காய்கனிகள், மூலிகை பொருட்கள், எண்வகை சாத்துதல் உள்ளிட்ட வழிபாடு

திருப்பள்ளி எழுச்சி, காப்பு அணிவித்தல், திருக்குடஙகள் கோவிலை வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து கும்பாபிஷேக விழா சிரவை ஆதினம் 4-ம் பட்டம் குருமகா சன்னிதானம் திருப்பெரு இராமனந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது

. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு நடந்தது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story