ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹரமங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமர்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சீதா, லட்சுமணன், சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

1 More update

Next Story