மகாகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா


மகாகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா
x

திருத்துறைப்பூண்டி அருகே துறக்குடி மகாகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே துறக்குடி மகா காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது. விழா நாட்களில் சாமி வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தீபாராதனை் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன், மற்றும் மன்னை சாலை பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story