மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

சீர்காழி தென்பாதி மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 10-ந் தேதி(வெள்ளிக்கிழமை) தீமிதி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story