வேம்படி மாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா


வேம்படி மாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா
x

கூத்தாநல்லூர் அருகே வேம்படி மாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே உள்ள, புள்ளமங்கலத்தில் வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி திருவிழா நடைப்பெற்றது. இதில், அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், வில்வபொடி, மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் ஒன்று கூடி, அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடத்தினர். இதனையடுத்து சக்தி கரகம், அக்னி கப்பரை, அம்மன் வீதிவுலா காட்சி நடைப்பெற்றது. முடிவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story