கோவிலில் திருவிளக்கு பூஜை

அம்மாப்பேட்டை அருகே உள்ள கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
அம்மாப்பேட்டை அருகே புத்தூர் கிராமத்தில் உள்ள புற்றிடம்கொண்டீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றினர். தொடர்ந்து சுவாமி, அம்மன் உள்ளிட்டோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் புத்தூர் கிராமமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





