பெண்கள் பூந்தட்டு ஊர்வலம்

முக்கூடல் கோவிலில் ஆனி திருவிழா: பெண்கள் பூந்தட்டு ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்
முக்கூடல்:
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 7-ம் நாளான நேற்று பகலில் சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பெண்கள் பூந்தட்டு ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவில் அம்மன் சப்பர பவனி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





