20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், கோலி
20 ஓவர் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
துபாய்,
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றிய பிறகு 20 ஓவர் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இலங்கை தொடருக்கு முன்பாக 119 புள்ளிகளுடன் 4-வது இடம் வகித்த இந்திய அணி வெற்றியின் மூலம் 121 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். திருமணம் காரணமாக விராட் கோலி, இலங்கைக்கு எதிரான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை. ஒவ்வொரு ஆட்டத்தையும் தவற விடும் போது சம்பந்தப்பட்ட வீரரின் ஒட்டுமொத்த தரவரிசை புள்ளி எண்ணிக்கையில் இருந்து 2 சதவீதம் குறைந்து விடும். அந்த வகையில் விராட் கோலியின் புள்ளி எண்ணிக்கை 824-ல் இருந்து 776 ஆக குறைந்துள்ளது. கோலியின் சரிவால் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் (784 புள்ளி) முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார். வெஸ்ட் இண்டீசின் எவின் லீவிஸ் (780 புள்ளி) 2-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.
இலங்கை தொடரில் 2 அரைசதம் உள்பட 154 ரன்கள் சேர்த்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கிடுகிடுவென 23 இடங்கள் எகிறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனையை சமன் செய்த மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா 6 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்துக்கு வந்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் சறுக்கியுள்ளார். இலங்கை உடனான முதல் இரு ஆட்டங்களில் விக்கெட் எதுவும் எடுக்காத பும்ராவுக்கு (702 புள்ளி) 3-வது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதன் விளைவாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் (718 புள்ளி) மறுபடியும் முதலிட அரியணையில் அமர்ந்துள்ளார்.
இந்த தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை பேட்ஸ்மேன்களை மிரள வைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 14 இடங்கள் அதிகரித்து, 16-வது இடத்தை பெற்றிருக்கிறார்.
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றிய பிறகு 20 ஓவர் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இலங்கை தொடருக்கு முன்பாக 119 புள்ளிகளுடன் 4-வது இடம் வகித்த இந்திய அணி வெற்றியின் மூலம் 121 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். திருமணம் காரணமாக விராட் கோலி, இலங்கைக்கு எதிரான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை. ஒவ்வொரு ஆட்டத்தையும் தவற விடும் போது சம்பந்தப்பட்ட வீரரின் ஒட்டுமொத்த தரவரிசை புள்ளி எண்ணிக்கையில் இருந்து 2 சதவீதம் குறைந்து விடும். அந்த வகையில் விராட் கோலியின் புள்ளி எண்ணிக்கை 824-ல் இருந்து 776 ஆக குறைந்துள்ளது. கோலியின் சரிவால் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் (784 புள்ளி) முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார். வெஸ்ட் இண்டீசின் எவின் லீவிஸ் (780 புள்ளி) 2-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.
இலங்கை தொடரில் 2 அரைசதம் உள்பட 154 ரன்கள் சேர்த்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கிடுகிடுவென 23 இடங்கள் எகிறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனையை சமன் செய்த மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா 6 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்துக்கு வந்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் சறுக்கியுள்ளார். இலங்கை உடனான முதல் இரு ஆட்டங்களில் விக்கெட் எதுவும் எடுக்காத பும்ராவுக்கு (702 புள்ளி) 3-வது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதன் விளைவாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் (718 புள்ளி) மறுபடியும் முதலிட அரியணையில் அமர்ந்துள்ளார்.
இந்த தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை பேட்ஸ்மேன்களை மிரள வைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 14 இடங்கள் அதிகரித்து, 16-வது இடத்தை பெற்றிருக்கிறார்.
Related Tags :
Next Story