கோலி–அனுஷ்கா தம்பதிக்கு 2–வது முறையாக திருமண வரவேற்பு


கோலி–அனுஷ்கா தம்பதிக்கு 2–வது முறையாக திருமண வரவேற்பு
x
தினத்தந்தி 26 Dec 2017 10:30 PM GMT (Updated: 26 Dec 2017 7:37 PM GMT)

கிரிக்கெட் வீரர் கோலி– அனுஷ்கா தம்பதிக்கு 2–வது முறையாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நேற்றிரவு நடந்தது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இத்தாலியில் உள்ள பழமையான உல்லாச விடுதியில் கடந்த 11–ந்தேதி ரகசியமாக நடந்தது. தேன்நிலவு கொண்டாடிவிட்டு தாயகம் திரும்பிய விராட் கோலி– அனுஷ்கா தம்பதியினர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இரண்டு விதமாக நடத்த முடிவு செய்தனர்.

இதன்படி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கான திருமண வரவேற்பு டெல்லியில் கடந்த 21–ந்தேதி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்தினார்.

இந்த நிலையில் 2–வது முறையாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு தடபுடலாக நடந்தது. இதையொட்டி 300 சிறப்பு விருந்தினர்கள் வரை அமரக்கூடிய அறை பதிவு செய்யப்பட்டிருந்தது.

அஸ்வின், புஜாரா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, பும்ரா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேரில் வந்து புதுமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விக்கெட் கீப்பர் டோனி, தனது மனைவி சாக்ஷி, மகள் ஸிவாவுடன் வந்திருந்தார். இதே போல் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் பயிற்சியாளர் கும்பிளே, முன்னாள் வீரர் ஷேவாக், பேட்மிண்டன் மங்கை சாய்னா நேவால், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இந்தி நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விழாவை சிறப்பித்தனர்.

Next Story