ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரம்


ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரம்
x
தினத்தந்தி 4 Jan 2018 8:08 AM GMT (Updated: 4 Jan 2018 8:07 AM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தக்கவைக்கப்படும் வீரர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. #IPL

மும்பை

11ஆவது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை அளிக்க இன்று கடைசி நாளாகும். 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மகேந்திர சிங் டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கொல்கத்தா அணி  கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல் ஆகியோரை தக்கவைக்கிறது.சன்ரைஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர், ரஷீத் கான் ஆகியோரை தக்கவைத்து கொள்கிறது.டெல்லி டேர் டெவில் அணி ரிஷாப் பந்த், ஸ்ரீயாஸ் அய்யர் ஆகியோரை தக்கவைத்து கொள்கிறது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தையும் தக்க வைக்கும் எனத் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா, பாண்ட்யா, பும்ரா ஆகியோரை தக்க வைக்கும் எனவும் கூறப்படுகிறது.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் க்ளென் மாக்ஸ்வெல்லை தக்கவைக்கிறது.

ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம். நேரடியாகத் தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 11ஆவது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 27, 28ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

Next Story