விராட் கோலி பாகிஸ்தான் மண்ணில் சதம் அடிக்க முடியாது சவால் விடும் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்


விராட் கோலி பாகிஸ்தான் மண்ணில் சதம் அடிக்க முடியாது சவால் விடும் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்
x
தினத்தந்தி 9 Feb 2018 12:15 PM GMT (Updated: 9 Feb 2018 12:15 PM GMT)

கிரிக்கெட் விளையாடும் ஒன்பது நாடுகளிலும் சென்றும் சதம் அடித்து சாதனை செய்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் மண்ணில் சதம் அடிக்க முடியாது என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

இந்திய அணியின் கேப்டனாக 29 வயதான விராட் கோலி செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் சதம் அடித்து அபாரமாக விளையாடி வருகிறார் கோலி.

 இந்நிலையில் அவரை சீண்டும் விதமாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பேசியுள்ளார். 

விராட் கோலி சிறந்த வீரர். அவர் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுவதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் அவர் பாகிஸ்தானில், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன் சேர்ப்பது கடினம். இந்தியா விரைவில் பாகிஸ்தானில் விளையாடும் என நம்புகிறேன் என கூறி உள்ளார்

Next Story