இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான பெண்கள் 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து


இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான பெண்கள் 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து
x
தினத்தந்தி 21 Feb 2018 10:00 PM GMT (Updated: 21 Feb 2018 8:08 PM GMT)

முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா - இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது விக்கெட் கீப்பர் லிசெலி லீ (58 ரன், 2 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் டேன் வான் நீகெர்க் (55 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் அடித்திருந்தனர்.

தொடர்ந்து மழை பெய்ததாலும், அடுத்து இதே மைதானத்தில் ஆண்கள் 20 ஓவர் போட்டியை தொடங்க வேண்டி இருந்ததாலும் 2 மணி நேர காத்திருப்புக்கு பிறகு இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நாளை மறுதினம் நடக்கிறது.

Next Story