விரும்பினால் வீராட் கோலிக்கு 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் இருந்து ஒய்வு - பிசிசிஐ


விரும்பினால் வீராட் கோலிக்கு 3 நாடுகள் 20 ஓவர்  போட்டியில் இருந்து ஒய்வு - பிசிசிஐ
x
தினத்தந்தி 22 Feb 2018 6:00 AM GMT (Updated: 22 Feb 2018 6:00 AM GMT)

இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டியில் வீராட்கோலி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #Viratkohli #BCCI

மும்பை, 

வீராட்கோலி தலைமையிவான இந்திய கிரிக்கெட் அணி தற்பேது தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. வருகிற 24-ந்தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.

அடுத்து இந்திய அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. 3-வது நாடாக வங்காளதேசம் கலந்து கொள்கிறது.

இந்தப்போட்டி மார்ச் 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொழும்பு பிரேம தாச மைதானத்தில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் இருந்து கேப்டன் வீராட்கோலி விலகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் அவர் ஓய்வு கேட்க இருக்கிறார்.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டியில் வீராட்கோலி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

இலங்கையில் நடை பெறும் போட்டியில் இருந்து வீராட்கோலி ஓய்வு பெற விரும்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும். விளை யாடுவதா? வேண்டாமா? என்பது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த சீசனில் கடைசி தொடர் என்பதால் அவர் விளையாடவே விரும்பலாம். இதன்பிறகு ஐ.பி.எல். போட்டி தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story