ஐ.பி.எல். கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம்


ஐ.பி.எல். கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம்
x
தினத்தந்தி 24 Feb 2018 11:00 PM GMT (Updated: 24 Feb 2018 9:14 PM GMT)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம்.

புதுடெல்லி,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ஆண்டு தடைக்கு பிறகு மீண்டும் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. இந்த சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவன் சுமித் நேற்று நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் வார்னே பேசுகையில், ‘கேப்டன் பதவி மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெவ்வேறு நாடுகளில் இருந்து அணியில் இடம் பிடித்து இருக்கும் வீரர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட வைக்க வேண்டியது கேப்டனின் பொறுப்பாகும். ராஜஸ்தான் அணியில் ஸ்டீவன் சுமித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ரஹானே ஆகிய வீரர்களுக்கு அணியை வழிநடத்தக்கூடிய திறமை உண்டு என்பதை அறிவேன். எங்கள் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித்தை அறிவிக்கிறேன்’ என்று தெரிவித்தார். ஐ.பி.எல். போட்டி அணியின் கேப்டன் நியமனம் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Next Story