நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்- இங்கிலாந்து அணி அபார வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்- இங்கிலாந்து அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 10 March 2018 10:00 PM GMT (Updated: 10 March 2018 11:28 PM GMT)

இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

கிறைஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து களம் புகுந்த இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, நியூசிலாந்து பவுலர்களை வறுத்தெடுத்தனர். ரன்மழை பொழிந்த அவர் 58 பந்துகளில் சதத்தை எட்டியதோடு வெற்றிக்கும் அடித்தளம் போட்டார். அவர் 104 ரன்களில் (60 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) டிரென் பவுல்ட் பந்தை அடித்து ஆட முயன்ற போது பேட் தவறுதலாக ஸ்டம்பை பதம் பார்த்ததால் ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்த சில ஓவர்களில் அலெக்ஸ் ஹாலெஸ் 61 ரன்னிலும், கேப்டன் மோர்கன் 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 32.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக வசப்படுத்திய 6-வது ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும்.

Next Story