பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி: மைதானத்தை உலர வைக்க ராணுவ ஹெலிகாப்டர்


பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி: மைதானத்தை உலர வைக்க ராணுவ ஹெலிகாப்டர்
x
தினத்தந்தி 22 March 2018 11:36 AM GMT (Updated: 22 March 2018 11:36 AM GMT)

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் மழையால் பாதித்த மைதானத்தை உலர வைக்க ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.


பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்  போட்டிகள் லாகூர் கடாபி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த  போட்டியில்  கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி ஆகியோருக்கு இடையில் போட்டி நடைபெற்றது. அப்போது  மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதிக்கப்பட்டது. மழை முடிந்ததும்  மைதானத்தை உலர வைக்க   இராணுவ ஹெலிகாப்டர்கள்  
பயன்படுத்தப்பட்டன. 

இந்த பணியில் 2 ராணுவ ஹெலிகாபடர்கள் பயன்படுத்தப்பட்டன. இதை பார்த்த மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்த   வீடியோ விரைவில் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.



Next Story