இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி திரில் வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி திரில் வெற்றி
x
தினத்தந்தி 6 April 2018 11:15 PM GMT (Updated: 6 April 2018 8:16 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி திரில் வெற்றி பெற்றது.

நாக்பூர்,

உலக சாம்பியன் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஆட்டம் நாக்பூரில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.3 ஓவர்களில் 207 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், எக்தா பிஷ்ட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்களுடன் எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. மந்தனா (86 ரன், 5 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறியதும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. 190 ரன்களை எட்டிய போது இந்திய அணி தனது 9-வது விக்கெட்டை பறிகொடுக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதன் பிறகு எக்தா பிஷ்டும் (12 ரன்), பூனம் யாதவும் (7 ரன்) போராடி ஒரு வழியாக அணியை கரைசேர்த்தனர். இந்திய அணி 49.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. முன்னதாக, அதிக பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற (192 ஆட்டம்) இந்திய கேப்டன் மிதாலி ராஜ் டக்-அவுட் ஆனார்.

2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

Next Story