பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா மிதாலிராஜ் புதிய சாதனை


பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா மிதாலிராஜ் புதிய சாதனை
x
தினத்தந்தி 12 April 2018 9:00 PM GMT (Updated: 12 April 2018 8:48 PM GMT)

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது.

நாக்பூர், 

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. விக்கெட் கீப்பர் மை ஜோன்ஸ் (94 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (36 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் சோபிக்கவில்லை.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 45.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணியில் மந்தனா (53 ரன்), ஆட்டம் இழக்காமல் கேப்டன் மிதாலிராஜ் (74 ரன், 124 பந்து, 9 பவுண்டரி) தீப்தி ‌ஷர்மா (54 ரன், நாட்–அவுட்) அரைசதம் அடித்தனர். மிதாலிராஜ் ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 56–வது முறையாகும். இதன் மூலம் பெண்கள் ஒரு நாள் போட்டி வரலாற்றில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்சின் (55 முறை) சாதனையை முறியடித்தார்.


Next Story