சென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமான தொடக்கம்
11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தோ்வு செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #IPL2018 #CSK #SRH
ஐதராபாத்,
11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சையை செய்ய தொடங்கினா்.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார்..
இதன்படி, சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரா்களான ஷேன் வாட்சனும், டூ பிளெசிஸும் களமிறங்கினா், ஐதராபாத் அணியின் தொடக்க பந்து வீச்சாளா்களான புவனேஷ்வா்குமாரும் மற்றும் பில்லி ஸ்டான்லேக்கும் தன்னுடைய முதல் ஓவாிலேயை ராக்கெட் வேகத்தில் பந்துகளை வீசினா். இதன் காரணமாக சென்னை அணி தடுமாறி மந்தமான தொடக்கத்தை வெளிபடுத்தியது. சிறிது நேரத்திலேயை அதிரடி ஆட்டகாரரான ஷேன் வாட்சன் 9(15) ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.
பின்னா் சுரேஷ் ரெய்னா களத்தில் பிரவேசித்து அதிரடியை தொடங்குவதற்கு முன்பே,ரஷித்கான் சுழலில் சிக்கி டூ பிளெசிஸும் பெவிலியன் திரும்பினாா். இவா்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அம்பதி ராயுடு களமிறங்கி விளையாடி வருகிறாா்.இருவரும் அணியை சாிவில் இருந்து மீட்பதற்கு போராடிவருகின்றனா்.
ஐதராபாத் அணியின் பலமான பவுலிங்கின் மூலம் சென்னை அணியின் டாப் பேட்ஸ்மேன்களை சீா்குலைய செய்து வருகின்றனா்.
இந்நிலையில் ஐதராபாத் அணியின் சாா்பில் புவனேஷ்வர்குமாரும் ரஷீத் கானும் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனா்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 10 ஓவா்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
Related Tags :
Next Story