ராஜஸ்தான்- மும்பை அணிகள் பலப்பரீட்சை தொடங்கியது


ராஜஸ்தான்- மும்பை அணிகள்  பலப்பரீட்சை தொடங்கியது
x
தினத்தந்தி 22 April 2018 2:52 PM GMT (Updated: 22 April 2018 2:52 PM GMT)

ஐ.பி.எல்-ன் 21 வது லீக் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தோ்வு செய்துள்ளது. #IPL2018

ஜெய்பூா்,

11வது ஐபிஎல் போட்டியின் 21வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு ஆட்டமாக தொடங்கிய இந்த போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியுன்  கேப்டன் ரோகித் சா்மா பேட்டிங்யை தேர்வு செய்துள்ளாா்.

நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. முதல் 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்று இருந்த மும்பை அணி, பெங்களூருவை சாய்த்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.  

அதே சமயம் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி சொந்த மண்ணில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 16 ஆட்டங்களில் 6-ல் ராஜஸ்தானும், 10-ல் மும்பையும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

Next Story