கவுண்டி கிரிக்கெட் சுர்ரே அணிக்காக ஆடுகிறார், விராட்கோலி


கவுண்டி கிரிக்கெட் சுர்ரே அணிக்காக ஆடுகிறார், விராட்கோலி
x
தினத்தந்தி 3 May 2018 11:00 PM GMT (Updated: 3 May 2018 7:08 PM GMT)

விராட்கோலி, கவுண்டி கிரிக்கெட் சுர்ரே அணிக்காக விளையாட உள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சுர்ரே அணிக்காக விளையாட இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சுர்ரே அணியின் இயக்குனர் அலெக்ஸ் ஸ்டீவர்ட் நேற்று தெரிவித்தார். ஜூலை மாதம் நடைபெறும் இங்கிலாந்து போட்டி தொடருக்கு தயாராகும் வகையில் விராட்கோலி கவுண்டி போட்டியில் விளையாட உள்ளார். ‘கவுண்டி போட்டியில் விளையாட வேண்டும் என்ற தனது நீண்ட கால நோக்கம் நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று விராட்கோலி தெரிவித்துள்ளார். இதனால் பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாடுவாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்த போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு முதலாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story