ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு


ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 7 May 2018 2:44 PM GMT (Updated: 7 May 2018 2:44 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.



ஐதராபாத்,  

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 7 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை.

விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கிய நிலையில் உள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் பெங்களூரு அணி இன்றையை போட்டியை எதிர்க்கொள்கிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷ்கர் தவான் மற்றும் அலெக்ஸ் களமிறங்கி விளையாடி வருகிறர்கள். 2 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 14 ரன் களை எடுத்து உள்ளது. ஷகர் தவான் 7 ரன் களுடனும், அலெக்ஸ் 5 ரன் களுடனும் விளையாடி வருகிறார்கள்.


Next Story