ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. #IPL2018
ஜெய்ப்பூர்:
11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில அதிகப்பட்சமாக ராகுல் திரிபாதி 80 ரன்களும் கேப்டன ரஹானே 33 ரன்களும் எடுத்திருந்தனா்.
பின்னா் 20 ஓவா்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது. இதைத்தொடா்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி முதலில் இருந்தே சற்று தடுமாறி வந்தது. இதனால் பெங்களூரு அணியின் வீரா்களை அனைவரும் ஒற்றை இலக்கு ரன்களில் வெளியேறினா். அதிகபட்மாக டிவில்லியா் மட்டும் அணிக்காக 53 ரன்களை சோ்த்தார். இருந்த போதும் மீதம் உள்ள வீரா்கள் ஜொலிக்காததால் 19.2 ஓவரிலேயே 134 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் ராஜஸ்தான் அணி்க்கு கொடுத்தது.
இந்நிலையி்ல் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
Related Tags :
Next Story