டோனியை ஏலத்தில் எடுக்காதது வருத்தமாக இருக்கிறது பிரீத்தி ஜிந்தா வேதனை


டோனியை ஏலத்தில் எடுக்காதது வருத்தமாக இருக்கிறது  பிரீத்தி ஜிந்தா வேதனை
x
தினத்தந்தி 29 May 2018 10:14 AM GMT (Updated: 29 May 2018 10:14 AM GMT)

டோனியை ஏலத்தில் எடுக்காதது வருத்தமாக இருக்கிறது என பிரீத்தி ஜிந்தா வேதனை தெரிவித்து உள்ளார். #PreityZinta #MSDhoni

டோனியை ஏலத்தில் எடுக்காதது வருத்தமாக இருக்கிறது  பிரீத்தி ஜிந்தா வேதனை

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில் டோனியை எடுக்காதது வருத்தமாக இருக்கிறது என பஞ்சாப் அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகையும் பஞ்சாபி கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா  கூறியதாவது, நான் டோனியின் தீவிர ரசிகை கிடையாது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் அவரது ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய அணித்தலைவர்களின் சிறந்த அணித்தலைவர் ஆவார். அவரின் வயது குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுகின்றன, ஆனால் தனது வயது பிரச்சினையால் அவரால் விளையாட இயலாது என்பதை அவர் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது. ஏனெனில், களத்தில் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை ஒவ்வொரு போட்டியின் போதும் நிரூபிக்கிறார் என கூறியுள்ளார்.

Next Story