இண்டர்காண்டினெண்டல் கோப்பை: இந்திய அணி வெற்றி - சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து


இண்டர்காண்டினெண்டல் கோப்பை: இந்திய அணி வெற்றி - சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Jun 2018 2:04 AM GMT (Updated: 5 Jun 2018 2:20 AM GMT)

இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து போட்டியில் கென்யா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. #SachinTendulkar #SunilSethri #IntercontinentalCup

மும்பை,

இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி 2 கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர்.

இந்நிலையில் கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கும், 100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் செத்ரிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் , “தேவைப்பட்ட சிறப்பான வெற்றி இது. நன்றாக விளையாடினீர்கள், இந்தியா. 100-வது போட்டி, இரு கோல்கள் என்பது சிறந்த சாதனை, சுனில் செத்ரி”, என அந்த பதிவில் சச்சின் தெரிவித்துள்ளார்.

தைபேவுடன் நடந்த ஆட்டத்தில் வெறும் 2000 பார்வையாளர்களே வந்திருந்தனர். இதனால் சுனில் செத்ரி போட்டியை காண வருமாறு ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கைக்கு கோலி மற்றும் சச்சின் ஆகியோர் ஆதரவாக டுவிட்டரில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டியை காண 9 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை நியூசிலாந்து அணியுடன் இந்தியா மோத உள்ளது. பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மோதும்.


Next Story