ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி சுதர்லாண்ட் ராஜினாமா


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி சுதர்லாண்ட் ராஜினாமா
x
தினத்தந்தி 6 Jun 2018 8:45 PM GMT (Updated: 6 Jun 2018 7:55 PM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஜேம்ஸ் சுதர்லாண்ட் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென நேற்று அறிவித்தார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஜேம்ஸ் சுதர்லாண்ட் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென நேற்று அறிவித்தார். 

இது குறித்து ஜேம்ஸ் சுதர்லாண்ட் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய பதவியில் இருந்துள்ளேன். பதவியில் இருந்து விலக இது சரியான தருணம் என்று கருதுகிறேன். நான் பதவி விலகுவதற்கு சவுகரியமான நேரமாக இதனை நினைக்கிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் இது நல்ல நேரமாகும். கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் வீரர்கள் ஒப்பந்தம் உள்பட பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே புதிய தலைமை செயல் அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைக்க இது சரியான நேரமாகும். ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கும், எனது விலகல் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என்று தெரிவித்தார். புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை ஜேம்ஸ் சுதர்லாண்ட் இந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story