ஐபிஎல் தொடரில் விளையாடிய நிதீஷ் ராணாவிற்கு விரைவில் திருமணம்


ஐபிஎல் தொடரில் விளையாடிய நிதீஷ் ராணாவிற்கு விரைவில் திருமணம்
x
தினத்தந்தி 12 Jun 2018 6:23 AM GMT (Updated: 12 Jun 2018 6:23 AM GMT)

ஐபிஎல் தொடரில் விளையாடிய கிரிக்கெட் வீரர் நிதீஷ் ராணாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய நிதீஷ் ராணா தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்யவுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் டாப் ஆர்டரில் இறங்கி அசத்திய இடது கை துடுப்பாட்ட வீரர் தான் நிதீஷ் ராணா.இவரின் கடந்த ஆண்டு ஆட்டத்தைப் பார்த்து, இந்தாண்டு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. அதே போன்று நிதிஷ் ராணாவும் முக்கியமான போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார்.இந்நிலையில் இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான சாச்சி மார்வாவை  திருமணம் செய்யவுள்ளார்.

இதை நிதீஷ் ராணா இன்னும் அறிவிக்கவில்லை, அவருடைய நண்பரும், டெல்லி அணி வீரருமான துருவ் ஷோரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய நண்பருக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார். அதில், சாச்சியும், நிதிஷ் ராணாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களது நிச்சயதார்த்தம்  கடந்த ஞாயிற்றுகிழமை நடந்து உள்ளது.


Next Story