தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-வது சீசன் ஜூலை 11ந்தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது.
சென்னை
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-வது சீசன் ஜூலை 11ந்தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது.
8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 14 போட்டிகளும் , சென்னையில் நான்கு போட்டிகளும் நடைபெறுகிறது. இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு பரிசாக ஒரு கோடி ரூபாயும், இரண்டாவதாக வரும் அணிக்கு பரிசாக ரூபாய் 60 லட்சமும் , மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூபாய் 40 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது .
இந்த போட்டி தொடர்பாக, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வீரர் அபினவ் முகுந்த், தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் பற்றி பாதுகாப்பு கவலைகள், தீவிரவாத நாடுகளுடனான உறவை துண்டிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுத திட்டம்.
வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் ஐபிஎல் 2019-க்கான போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்!