அழிவு பாதை நோக்கி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சச்சின் எச்சரிக்கை
2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #SachinTendulkar
ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 2 பந்துகளை பயன்படுத்துவது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனால், பந்துவீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற யுக்தியை பயன்படுத்த முடியாமல் திணறுவதாகவும், இது கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல என்றும் சச்சின் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்ததை சுட்டிக்காட்டியே சச்சின் இவ்வாறு கூறியுள்ளார்.
Having 2 new balls in one day cricket is a perfect recipe for disaster as each ball is not given the time to get old enough to reverse. We haven’t seen reverse swing, an integral part of the death overs, for a long time. #ENGvsAUS
— Sachin Tendulkar (@sachin_rt) June 21, 2018
Related Tags :
Next Story